Friday 3rd of May 2024 11:01:45 AM GMT

LANGUAGE - TAMIL
.
4 மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மழையுடன் மண்சரிவு எச்சரிக்கை!

4 மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மழையுடன் மண்சரிவு எச்சரிக்கை!


தற்போது இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை மற்றும் காற்றுட்ன் கூடிய காலநிலை நிலவும் எனவும் அங்கு மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வட மேல் மகாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்ந்து நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவிலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வட மேல் மகாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE